தமிழச்சி கருவறைகள்
கூர்வாள் கொண்டிடை
விண்ணறுப்போம்!
கூரையில் சிரித்திடும்
போர்கொடி மறவோம்!!
வெக்கை நீண்ட
காட்டுக்குள்ளே
எம்வேர்கள் இறுக்கம்
எப்படித் தணியும்?
விண் நின்று கலம் அறுத்து
குலம் அழிப்பவனே
பயத்தோடும் பதுங்குகுழியோடும்
எம்வாழ்வை முடக்கிடுவோமா?
மாட்டோம்!!!
கற்புக்காக்க
கைக்குண்டேந்துவோம்!
பொற்கை காக்க
பீரங்கிப்பிடிப்போம்!!
உறக்கமென்பதை
மறக்கக் கற்பிப்போம்
இரவில் இமைகளுக்கும்!
பகலில் பாதங்களுக்கும்!!
ஆம்!!!
சாவை சந்திக்க
பிறப்பெடுத்துள்ளோம்!
உன் பகையின் பலமழிக்க!!
எம் சூரியனை உரசிடும்
போர் மேகங்களே!
சுதந்திரமே எம் இலக்கு!
சுடுகாட்டு பூச்சாண்டிதனம்
வேண்டாம்!!
தமிழச்சி வயிற்றுக்கருக்கள்
புழுக்களல்ல
நீங்கள் நசுக்குவதற்கு!
அவை புலிகள்!!
கருப்பை கதவடைக்கும்வரை
கருக்களை சுமக்கும்
தமிழச்சி கருவறைகள்!
பிறக்கும் அதன் ஒலிகள்!!
இறப்பென்பது
உன் குண்டுகள்
தீரும்வரை!
இருந்துவிட்டு போகட்டும்!!
சுட சுட
நீ சுட சுட வெடிப்போம்!
சுடுதணல் அழிப்போம்!!
விடுதலை பெறுவோம்!
அதுவரை தொடர்வோம்!!
2 comments:
தங்கள் பணி தொடரட்டும்.நல்லத் தொடக்கம், எனது வாழ்த்துக்கள்
அன்பு சகோதரர் பாரதிக்கு,
உங்களது "தமிழச்சி கருவறைகள்" தமிழ் க்கவிதையினை படித்தேன், மிக்க அருமை .
அதில் எனக்கு பிடித்த வரிகள்
தமிழச்சி வயிற்றுக்கருக்கள் புழுக்களல்ல
நீங்கள் நசுக்குவதற்கு!
அவை புலிகள்!!
மிக அருமை யான வார்த்தைகள், தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
சிவா (நெல்லை ஆசி)
Post a Comment