Monday, December 24, 2012

அன்புள்ள தர்மலிங்கம் ஆசிரியருக்கு...


"உன் கட்டபொம்மன் மீசையை கொஞ்சம் டிரிம் பண்ணுடா" என யாராவது சொன்னால் எனக்கு சட்டென உங்கள் நினைவுதான் வந்து போகும்... ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே நான் உங்களிடம் ரசித்தது உங்கள் மீசையைத்தான்... இன்று கால்குலேட்டரை பயன்படுத்தாமல் கணக்கு போடும் ஒவ்வொரு முறையும், உங்களிடம் பாராட்டு வாங்க அவசர அவசரமாக கணக்கு பாடங்களை முடிக்கும் நாட்களை நினைத்து பார்க்கிறேன்... அப்பாவின் கண்டிப்பை உணராத எனக்கு முன்னுரை எழுதியது உங்கள் பூவரசமர குச்சிகள்தான்...


ஒருநாள் அம்மாவின் அலைபேசி ஊடாக நீங்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த செய்தி வந்தது... நான் நம்மவில்லை... என் ஆளுமையின் அஸ்திவாரம் நீங்கள்... என்னில் ஒரு ஆசிரியன் எட்டிப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் நீங்கள் இருப்பதை உணருகிறேன்... அப்படியே இருந்துவிட்டு போகிறேன்...

No comments: