அம்மாவிற்கு அலைபேசி ஒன்றை சமீபத்தில் வாங்கிக்
கொடுத்தேன்... தினமும் தவறாமல் அம்மாவிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது...
"தம்பி பொட்டவத்திலேர்ந்து செல்லு கீழே விழுந்திருச்சுய்யா, எதுன்னா
ஆயிறுமா?" "எத்தனை நாளைக்கு ஒருதரம் சார்ஜ் போடணும்?" "100
ரூபாய்க்கு போட்டா காசு எவ்வளவு ஏறும்யா?" என ஒரு குழந்தையாய் மாறி அம்மா
கேள்வி கேட்கிறாள். அம்மாவின் சந்தேகங்கள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும்,
பல வேளைகளில் சிந்தனையை தூண்டுகிறது...தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு அலைபேசியை பற்றி
அறிந்து கொள்ளவே அம்மா இவ்வளவு கேள்விகள் கேட்கும்போது, இந்த உலகத்தை பற்றி
அறிந்துக் கொள்ள அம்மாவிடம் நான் எத்தனை கேள்விகள் கேட்டு இருப்பேன்...
உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்...
ஐ லவ் யூ அம்மா.............
உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்...
ஐ லவ் யூ அம்மா.............
No comments:
Post a Comment